Disqus Shortname

உத்திரமேரூர் அருகே வாலிபர் கொலை முயற்சி 3 பேர் கைது.

 உத்திரமேரூர் 30/12/2019
உத்திரமேரூர் அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த டில்லிபாபு 37 கூலித்
தொழிலாளி. இவருக்கும் பருத்திக்கொள்ளை பகுதியை சேர்ந்தவர் பாபு 28 என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று
டில்லிபாபு உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில் நடந்து சென்று
கொண்டிருந்த போது அந்த வழியே காரில் வந்த பாபு மற்றும் அவரது
நண்பர்கள் டில்லிபாபுவை கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர்
சிறுங்கோழி பகுதியில் வைத்து டில்லிபாபுவை கொலை செய்ய
திட்டமிட்டதாக தெரிகிறது. இதை அறிந்த டில்லிபாபு அவர்கள் கண்ணில்
மண்னை தூவிவிட்டு அங்கிருந்து தப்பி நெல்வாய் அருகே வந்து
சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார். சாலவாக்கம் துணை
ஆய்வாளர் நித்தியானந்தம் தலைமையிலான போலீசார் நெல்வாய் பகுதியில்
விரைந்த வந்து டில்லிபாபுவை மீட்டனர். பின்னர் டில்லிபாபுவை கொலை
செய்ய வந்த கும்பல் அவரைத் தேடி நெல்வாய்க்கு வந்தது. அப்போது அங்கு
மறைந்திருந்த சாலவாக்கம் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இதில்
முக்கிய குற்றவாளியான பாபு அங்கிருந்து தப்பியோடினார். மீதமுள்ள
மூவரையும் பிடித்து விசாரித்ததில் மகேந்திராசிட்டி பகுதியை சேர்ந்த
அமல்ராஜ் 34, பருத்திக்கொள்ளையை சேர்ந்த விஜயகுமார் 33, மற்றும் ராதா
30 என்பதும், இவர்கள் பாபுவின் நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து
உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும்
அங்கிருந்து தப்பிய முக்கிய குற்றவாளியான பாபு வை தீவிரமாக தேடி
வருகின்றனர். இச்சம்பவத்தில் பாபு மற்றும் அமல்ராஜ் இருவரும் ஏற்கனவே
பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments