Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கடத்திச் செல்லப்பட்ட 4320 மது பாட்டில்கள் பறிமுதல்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமம் அருகே நரியம்புதூர் ஓடை
பகுதியில் பள்ளத்தில் சிக்கிய வேன் ஒன்றை சிலர் மீட்க முயன்று
கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே இரவு ரோந்து பணியில்
ஈடுபட்டிருந்த உத்திரமேரூர் போலீசாரை கண்டதும் மீட்பு பணியில்
ஈடுபட்டிருந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். சந்தேகத்தின் பேரில் அங்கு
சென்று வாகனத்தினை சோதனையிட்டதில் சட்ட விரோதமாக கடத்தி
வரப்பட்ட புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 90 கேஸ் 180 மில்லி கொள்ளவு
கொண்ட 4320 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த
வாகனம் மற்றும் மதுபாட்டில்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை செய்ததில் திருவண்ணாமலை மாவட்டம் சுருட்டல்
கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் கடத்தலில் ஈடுபட்டது. தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மோகன் மீது வழக்கு பதிவு செய்து தேடி
வருகின்றனர்.

No comments