Disqus Shortname

உத்திரமேரூர் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

உத்திரமேரூர்19/12/2019
உத்திரமேரூர் அடுத்த ஆணைப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த் 20
தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம்
காலை காஞ்சிபுரம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது
அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள் தங்களது
செல்போனில் சார்ஜ் இல்லை. அவசர கால் செய்யனும் உங்கள் செல்போன்
கொஞ்சம் கொடுங்க என்று வசந்திடம் கேட்டுள்ளனர். வசந்தும் அவசரம்
என்றதால் அவர்களிடம் தனது செல்போனை கொடுத்துள்ளார். செல்போனில்
பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்று வாலிபர்கள் அங்கு
நிறுத்தியிருந்த அவர்களது இருசக்கர வாகனத்தில் செல்போனை திருடிக்
கொண்டு மாயமாகினர். இது குறித்து வசந்த் உத்திரமேரூர் போலீசாரிடம்
புகார் அளித்தார். புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீசார் விசாரணை
நடத்தியதில் திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை 19, மருதம்
கிராமத்தை சேர்ந்த சின்னராஜி 22 என்பதும் தெரியவந்தது. இதையடுத்து
அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

No comments