Disqus Shortname

உத்திரமேரூர், சாலவாக்கம் ஒன்றியங்களில் திமுகவினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு

உத்திரமேரூர் 18/11/2019
உத்திரமேரூர், சாலவாக்கம் ஒன்றிய மற்றும் பேரூராட்சிகளில் வரவிருக்கும்
உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்பமனு
வழங்கினர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள்
நடைபெற்று வந்த நிலையில் உத்திரமேரூர் மற்றும் சாலவாக்கம்
ஒன்றியங்கள் மற்றும் உத்திரமேரூர் பேரூராட்சிகளில் திமுக சார்பில்
உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள்,
ஊராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும்
வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிட
விருப்பமுள்ளாவர்கள் மனு அளித்தனர். நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு
மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு திமுக சார்பில்
போட்டியிடுபவர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வெளிக்காடுஏழுமலை, மாவட்ட
ஆதிதிராவிடர் நலதுணை அமைப்பாளர் துரைவேல், மாவட்ட பிரதி நிதி
அப்பாதுரை, பொதுக்குழு உறுப்பினர் நாகன், ஒன்றிய செயலாளர்கள் குமார்,
ஞானசேகரன், பாரிவள்ளல் விவசாய அணி ஏழுமலை, சுப்பையா,
பொறியாளரணி சசிகுமார், வெங்கடேசன், முரளி உட்பட நிர்வாகிகள் பலர்
கலந்து கொண்டனர்.

No comments