Disqus Shortname

உத்திரமேரூரில் நரிக்குறவர்கள் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை மீட்டு தர வேண்டி ஆர்பாட்டம்

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த வயலூர் மற்றும் பெருநகர் ஆகிய கிராமங்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 40 திற்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வாறு வசித்து வரும் நரிக்குறவ குடும்பதை சேர்ந்வர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும், வயலூரில் நரிக்குறவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்து பட்டா மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது. அந்த இடங்களை கணக்கெடுத்து அவைகளை மீட்டுத் மீண்டும் நரிக்குறவர்களுக்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் நடத்தினர். ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு நில உரிமைக் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ருக்குமாங்கதன் தலைமையில் நரிக்குறவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நரிக்குறவர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கினர். நிகழ்வின் போது நரிக்குறவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

No comments