உத்திரமேரூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் வேட்புமனு தாக்கல்
உத்திரமேரூர்
18வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட ஜெயந்திரமேஷ்
உத்திரமேரூர் பேரூராட்சியில் நடைப்பெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி,
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வெள்ளி சனி என
இரண்டு நாட்களும் வேட்புமனு தாக்கல் ஏதும் நடைபெறாத நிலையில் நேற்று
திங்கட்கிழமையன்று காலை முதல் விண்ணப்ப படிவங்கள் மட்டும் பலர் வாங்கிச்
சென்றனர். இந்நிலையில் பேரூராட்சி உட்பட்ட மூன்றாவது வார்டில் சுயேச்சையாக
போட்டியிட கோமளாசிவகுமார் மற்றும் 18வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட
ஜெயந்திரமேஷ் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் 18 வார்டுகளில்
போட்டியிட மொத்தம் 56 பேர் விண்ணப்ப படிவம் வாங்கி சென்றுள்ளனர்.
18வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட ஜெயந்திரமேஷ்
மூன்றாவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட கோமளாசிவகுமார்
No comments