உத்திரமேரூரில் அதிமுக சார்பில் 18 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஆனது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று துவங்கியது இந்நிலையில் இன்று காலை அதிமுக சார்பில் 18 வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர் முன்னதாக காஞ்சி அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் மற்றும் கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் தலைமையிலான வேட்பாளர்கள் மற்றும் அதிமுகவினர் உத்தரமேரூர் பஜார் வீதியில் உள்ள எம்ஜிஆர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து பஜார் வீதி வழியாக வீதி உலா வந்தனர் இதனை தொடர்ந்து உத்தரமேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் 18 வார்டுகளிலும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக வேட்புமனு தாக்கல் செய்தனர் நிகழ்வின்போது ஒன்றிய செயலாளர் தங்க பஞ்சாட்சரம் தருமன் நகர செயலாளர் ஜெயவிஷ்ணு உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்
No comments