உத்திரமேரூர் அருகே தனியார் நிறுவன சோதனை ஓட்டக் கார் அதிவேகமாக வந்த மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலி
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த ராவத்தநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மாரி இவரது
மகன் அஸ்வித் 11 களியாம்பூண்டி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அஸ்வித் தனது சைக்கிளில் காரணிமண்டபத்தில் உள்ள கடைக்கு சென்று
கொண்டிருந்தார். அப்போது தனியார் கம்பெனிக்கு சொந்தமாக சோதனை ஓட்ட கார் ஒன்று
வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காரணிமண்டபம் அருகே
வந்த போது திடீரென நாய் ஒன்று சாலையினை கடக்க முயன்றது. நாய் மீது மோதாமல்
இருக்க கார் ஓட்டுநர் காரினை திருப்பிய போது எதிர்பாராத விதமாக அங்கு சைக்கிளில்
சென்று கொண்டிருந்த அஸ்வித் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில்
அஸ்வித் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அஸ்வித் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தார் தகவலறிந்த பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து
சிறுவனின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு
அனுப்பி வைத்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில்
பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
No comments