Disqus Shortname

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுக வேட்புமனுத்தாக்கல் தீவிரம்

உத்தரமேரூர் பிப் 02
தமிழகத்தில் 21 மாநகராட்சி 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி என மொத்தம் 649 நகர்புற அமைப்புகளுக்கு வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ஆம் தேதி துவங்கியது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுநாள் உடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டி காட்டி வருகின்றனர் இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க சுந்தர் எம்எல்ஏ அவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் திரளாக உத்தரமேரூர் பஜார் வீதி வழியாக நடந்து சென்று உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் 18-வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் இன்று ஒரே கட்டமாக ஆர்வமுடன்வேட்பு மனு தாக்கல் செய்தனர். மேலும் கூட்டணி கட்சியினர் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த இடமும் ஒதுக்கி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் உத்திரமேரூர் பேரூராட்சி 17வது வார்டு சுயேட்சை வேட்பாளராக திரு மாதவமணி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார்   







No comments