Disqus Shortname

உத்திரமேரூரில் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம்


உத்திரமேரூர் 2018 ஆக, 25
உத்திரமேரூரில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகளுக்கான செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் .சுந்தர் எம்.எல். தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் வசந்தமாலா, மாவட்ட பொருளாளர் சுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பாரிவள்ளல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கூட்டத்தில் திமுக தலைவர் டாக்டர் கலைஞர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு..ஸ்டாலின் அவர்களை திமுக தலைவராக பொருப்பேற்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு ஒன்றியங்கள் வாரியாக பெருந்திரளானோர் கலந்து கொள்ள வேண்டியது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் எழிலரசு, ஆர்.டி.அரசு, புகஷேந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன், விவசாய அணி நிர்வாகிகள் சோழனூர் மா.ஏழுமலை, காவனூர்புதுச்சேரி சுப்பைய்யா, ஒன்றிய செயலாளர்கள் குமார், சேகர், சரவணன், சத்தியசாய், ராமச்சந்திரன், சிறுவேடல் செல்வம், நகர செயலாளர்கள் பாண்டியன், உசேன், மாவட்ட பொறியாளர் அணி ரவிந்திரநாத், மாணவரணி நிர்வாகிகள் அபுசாலி, பெ.மணி, தொண்டரணி ஜெய்கணேஷ், நெசவாளர் அணி தமிழ்செல்வன், கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments