Disqus Shortname

உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம்


உத்திரமேரூர் ஆக, 15 
உத்திரமேருர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரிச்சாமி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் பார்வையாளராக மக்கள் நீதி மய்யம் உயர்மட்ட குழு நிர்வாகிகள் உட்பட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராமத்தில் மழை நீர் கால்வாய்கள், குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியினை சீரமைத்து முறைபடுத்திட வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்க வேண்டும், கிராமங்களில் உள்ள சுகாதார மையம், அங்கன்வாடி மையம், வழிபாட்டு தளங்கள் என பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்கள் அனைத்தையும் முறையாக பராமரித்திட வேண்டும், மேலும் திறந்த வெளியில் மலம் கழிக்காத, சுகாதாரமாக கிராமமாக மாற்றிட ஒத்துழைப்பு அளித்திட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து விவதிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments