Disqus Shortname

உத்திரமேரூரில் 72 வது சுதந்திர தினவிழா


உத்திரமேரூர் ஆக,15
உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிச்சாமி தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றி வைத்த இனிப்புகள் வழங்கினார். முன்னதாக தேசிய ஒருமைப்பாடு குறித்த உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இதேப் போல் உத்திரமேரூர் பேரூராட்சியில் 72 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி அலுவலக வளாகத்தில் செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய பேரூராட்சி ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உத்திரமேரூர் அடுர்தத விசூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் குமார் தலைமை தாங்கி தேசியக் கொடியினை ஏற்றினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் கல்வி வளர்ச்சி மற்றும் மாணவ-மாணவியர்களின் கல்வித்தரம் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments