உத்திரமேரூரில் கிருபானந்த வாரியார் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
உத்திரமேரூரில் திருமுருக
கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளையொட்டி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
உத்திரமேரூர்
செங்குந்த பிள்ளையார் கோவில் தெருவில் கிருபானந்த வாரியாரின் உருவம் பதித்த சிலை ஒன்றினை அமைத்து அதற்கு காலை மாலை வேலைகளில் பூஜைகள் செய்து அப்பகுதி மக்கள் வழிபட்டு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கிருபானந்த வாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கிருபானந்த வாரியாரின் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கிருபானந்த வாரியார் சிலைக்கு தீபாராதனை காட்டி பொது மக்கள் வழிபட்டனர். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முதியோர் மற்றும் ஊனமுற்றோர்க்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. அப்பகுதி மாணவ-மாணவியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழாவில் கிருபானந்த வாரியாரின் உறவினர் புகழனார் தலைமை தாங்கினார். டாக்டர் சுப்பரமணி, பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் அப்பகுதியினை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
No comments