Disqus Shortname

திருப்புலிவனத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?

உத்திரமேரூர் 06/06/2023: 
உத்திரமேரூர்- - காஞ்சிபுரம் சாலையில், திருப்புலிவனம் பகுதி உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பயணியர் இங்கிருந்து, உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். திருப்புலிவனத்தில் இயங்கும் அரசு கலைக் கல்லூரி, பள்ளி மாணவர்கள், இங்குள் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில், இதுவரை பயணியர் நிழற்குடை அமைக்கவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் வெயில் மற்றும் மழை நேரங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்புலிவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments