Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மின்வாரிய ஊழியர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர் 04/06/2023
உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் திடீர்ரென பலத்த சூறாவளி காற்றுடன்
மழை பெய்தது. சுறாவளி காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரியம் சார்பில் மரங்கள் மற்றும் மின்கம்பங்களை சீரமைத்து நேற்று காலை பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அகரம்தூளி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் அகரம்தூளி கிராமத்திற்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, காலனி நடுத்தெரு, பெரிய தெரு உள்ளிட்ட தெருக்களில் மட்டும் மின்சாரம் வழங்கப்படாமல் இருந்தது. நேற்று முன்தினம் இரவு துண்டான மின்சாரம் நேற்று மாலை வரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு மின்வாரிய ஊழியர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியர்களை கண்டித்து அகரம்தூளி கிராமத்திற்கு வந்த மினி பேருந்தை வழி மறித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments