Disqus Shortname

சார் - பதிவாளர் அலுவலகம் புதிதாக கட்ட கோரிக்கை

உத்திரமேரூர்:
உத்திரமேரூர் பேரூ ராட்சி, சன்னிதி தெருவில் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.உத்திரமேரூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களின் முக்கிய ஆவணங்கள் இந்த அலுவலகத்தில் பதிவு செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.தினமும் பத்திரப்பதிவு, திருமணப்பதிவு என, பதிவுத் துறை சம்பந்தமாக ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.ஓடுகளால் வேயபட்டுள்ள இந்த அலுவலக கட்டடம், பல ஆண்டு களாக சிதிலமடைந்து, இடிந்து விடும் நிலையில் உள்ளது.எனவே, உத்திரமேரூர் சார் - பதிவாளர் அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, இப்பகுதியில், போதுமான இடவசதியுடன் புதிய கட்டடம் ஏற்படுத்த, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments