Disqus Shortname

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை அழிக்கும் முயற்சி 4 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில்,உத்தரமேரூர் தாலுக்கா, பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமைலூர், என பல கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றதுஇந்நிலையில் நெற்குன்றம் கிராமத்தில் 15 ஏக்க

ரில் புதியதாக ஒரு கல்குவாரியும் அதன் அருகே மற்றொரு நான்கு கல்குவாரியும் அமையவுள்ளது. இந்த புதிய ஐந்து கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மற்றும் மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் மக்கள் நேரடியாக சென்று பல முறை மனு கொடுத்துள்ளனர்.ஏரிகள் நிறைந்த ஒருங்கினைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்தபடியாக, எடமச்சி கிராத்தில் உள்ள ஏரி மிக பெரிய ஏரி. இந்த ஏரியை நம்பி ஆனம்பாக்கம், நெற்குன்றம், எடமச்சி, கணதிபுரம், பொற்பந்தல், மாமந்தூர், பாலேஸ்வரம், சின்னாலம்பாடி, மெய்யூர் ஓடை, என 10-க்கும் மேற்பட்ட ,கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் கல்குவாரிகள் அமைந்தால் ஏரி முழுவதுமாக சேதமடையும், இயற்கையான மலை பகுதி மற்றும் காடுகள் முழுமையாக அழிக்கப்படும் விலங்குகள் மலை, காட்டு பகுதிகளில் இருந்து கிராமத்தில் சுற்றி திரிந்து பல பிரச்சனைகள் ஏற்படும். கல்குவாரிகளில் வெடி வைத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான வீடுகள் அனைத்தும் சேதமடையும் விவசாய நிலங்கள் முற்றிலும் சேதமடையும், எங்கு பார்த்தாலும் தூசு பறக்கும் லாரிகள் அடிக்கடி சென்று வந்தால், விபத்து அதிகம் ஏற்படும் சாலைகளும் சேதமடையும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாது காற்று மாசுபடும் என மக்கள் பல பிரச்சனைகளை சந்திக்கு நேரிடும். குறிப்பாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முற்றிலும் அழியக்கூடிய நிலை உருவாகும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலையத்திற்க்கு ஆண்டு தோறும் பல நாட்டில் இருந்து பறவைகள் இனப்பெருக்கம் செய்து, சொந்த நாடு திரும்புவது வழக்கம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு நீர் ஆதாரமே எடமச்சி ஏரி தான். இந்த ஏரி தண்ணீர் தான் வேடந்தாங்கல் செல்கின்றது. அதுமட்டுமன்றி, நெற்குன்றத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. அங்குள்ள அனைத்து வெளி நாட்டு பறவைகளுக்கும், உணவு எடமச்சி ஏரியும் அதன் அருகே உள்ள மலை மற்றும் காட்டு பகுதிகள் தான். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைக்காக, காலையில் வந்து இரைகளை தேடிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வேடந்தாங்கல் திரும்பும். எனவே, இந்த நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், மாமந்தூர் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைந்தால், வேடங்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிரந்தரமாக மூடகூடிய அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்லாது, கல்குவாரி சுற்றியுள்ள அனைத்து கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இயற்கை சீர்கெட்டு அழிய கூடிய நிலை உருவாகும். எனவே புதிய கல்குவாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க கூடாது என நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், சின்னாலம்பாடி, மாமந்தூர், மெய்யூர் ஓடை , கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்குவாரி அமைவதற்கு முதற்கட்ட பணியாக மின்மாற்றியை அமைத்தனர் . இதற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தனியார் சிலர் ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் இரவோடு இரவாக, மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் வழியாக, காப்புக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில், தற்காலிக மண் சாலை அமைத்து தனக்கு சொந்தமான நிலத்தின் வழியாக கல் குவாரி அமைக்க அரசு துறை அலுவலர்களுக்கு எந்தவிதமான முன்னறிவிப்புகள் செய்யாமல், நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையறிந்த கிராம மக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கனிமவளத்துறை,, மாவட்ட கோட்டாட்சியர், உத்தரமேரூர் வட்டாட்சியர், வருவாய்த் துறை உயர் அதிகாரிகள், உள்ளிட்ட அரசுத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு புகார்களை மனுக்களாக அளித்தும், இதுவரை எவ்வித ,கள ஆய்வு நடவடிக்கையும், எடுக்கப்படவில்லை. என கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் இன்று ஒன்றிணைந்து வருவாய்த்துறை ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் ஜான், ஆகியோரை, முற்றுகையிட்டதால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. வருவாய்த்துறை சார்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

No comments