Disqus Shortname

உத்திரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

உத்திரமேரூர் 12/06/2020 
உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள்
சங்கம் சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது
செய்யப்பட்டனர். மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் திருத்த
சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ளது- இதில் வெங்காயம் மற்றும்
உருளைக்கிழங்கு ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கி சட்டம்
நிறைவேற்றியது. இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து மலிவான விலைக்கு
பொருட்களை வாங்கி தட்டுப்பாடு ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை
செய்ய ஏதுவாக அமைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக
பாதிப்புக்குள்ளாவர். எனவே இந்த சட்ட திருத்தத்தை திரும்பப் பெற
வலியுறுத்தி உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு
விவசாயிகள் சங்கம் சார்பில் சங்க ஒன்றிய பொருப்பாளர் பொருமாள்
தலைமையில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. நிகழ்வின்
மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் சட்ட
நகல்களை எரிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த
போலீசார் அவற்றை தடுத்து நிறுத்தி விவசாய சங்கத்தினரை கைது
செய்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு
விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments