Disqus Shortname

உத்திரமேரூர் பஜார் வீதி கடைகளில் காஞ்சி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மனோகரன் திடீர் ஆய்வு

உத்திரமேரூர் 13/06/2020
உத்திரமேரூர் பேரூராட்சி பஜார் வீதியில் ஊரடங்கு தளர்வையடுத்துஅத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி பல்வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளது.இந்த கடைகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக பேரூராட்சி நிர்வாகம் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம், கட்டாய முக கவசம் அணிய வேண்டும். அனைத்து கடைகளிலும் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் உத்திரமேரூர் பஜார் வீதி கடைகளில் காஞ்சி மண்டல பேரூராட்சிகள் உதவி  இயக்குநர் மனோகரன் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பஜார் வீதியில் கடை கடையாக சென்று முக கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்துகிறார்களா. பொது மக்கள் சமூக இடைவெளியினை கடைபிடிக்கிறார்களா என ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணியாத கடைகளுக்கு வந்த பொது மக்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். நிகழ்வின் போது செயல் அலுவலர் லதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

No comments