Disqus Shortname

உத்திரமேரூரில் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் உலா வந்தவர்களுக்கு அபராதம்


உத்திரமேரூர் 12/06/2020
உத்திரமேரூர் பேரூராட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சி சார் ஆட்சியர் சரவணன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பஜார் வீதியில் உள்ள கடைகளில் பொது மக்கள் இடைவெளியை கடைபிடிக்கிறார்களா, முக்கவசம், பயன்படுத்துகிறார்களா மற்றும் அரசு அலுவலகங்களில் சானிடைசர் பயன்பாடு, சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பஜார் வீதியில் முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் உலா வந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு முககவசம் வழங்கி எச்சரித்து அனுப்பினர். நிகழ்வின் போது தாசில்தார் கோட்டிஸ்வரன், பேரூராட்சி செயல் அலுவலர் லதா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments