கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உறியடி திருவிழா
உத்திரமேரூர் 22-09-2019
உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் ஸ்ரீ.வேணுகோபால் பக்த சபா சார்பில்
புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி நேற்று முன்தினம் சுவாமிக்கு படையலிடும் நிகழ்ச்சி
மற்றும் கிருஷ்ண ஜெயந்தி உறியடி, சறுக்கு மரம் ஏறுதல் விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் வேணுகோபால் மடத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரின் திருஉருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உரியடி அதனைத் தொடர்ந்து சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டு வீரசாகசங்களை செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவ கிருஷ்ணர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி கிராமத்தில் ஸ்ரீ.வேணுகோபால் பக்த சபா சார்பில்
புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி நேற்று முன்தினம் சுவாமிக்கு படையலிடும் நிகழ்ச்சி
மற்றும் கிருஷ்ண ஜெயந்தி உறியடி, சறுக்கு மரம் ஏறுதல் விழாவும் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் வேணுகோபால் மடத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணரின் திருஉருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உரியடி அதனைத் தொடர்ந்து சறுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் இளைஞர்கள் பலர் உற்சாகமாக கலந்து கொண்டு வீரசாகசங்களை செய்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இரவு அலங்கரிக்கப்பட்ட உற்சவ கிருஷ்ணர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கிராம வீதிகளில் ஊர்வலமாக வந்து
பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வீடுகள்தோறும் தீபாராதனை காட்டி சுவாமியை வழிபட்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments