சாலவாக்கத்தில் கர்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்களுக்கான தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ
அலுவலர் மருத்துவர் உமாதேவி தலைமை தாங்கினார். சாலவாக்கம்
மருத்துவர் சௌமியா முன்னிலை வகித்தார். சுகாதார ஆயவாளர் கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கர்பிணிப் பெண்களுக்களுக்கு உணவு முறைகளால் உடல்நலம் மற்றும் சிசுவினை பராமரிக்கும் முறைகள், நோயின்றி நீண்டநாள் வாழ ஊட்டச்சத்தான உணவு வகைகள், சரிவிகித உணவு முறை பின்பற்றுதலின் அவசியம் போன்றவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் காய்கறிகள், கீரை வகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊட்டசத்துமிக்க உணவுகளை சமைத்து அவைகளை கர்பிணிப் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கர்பிணிப் பெண்களுக்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்களுக்கான தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ
அலுவலர் மருத்துவர் உமாதேவி தலைமை தாங்கினார். சாலவாக்கம்
மருத்துவர் சௌமியா முன்னிலை வகித்தார். சுகாதார ஆயவாளர் கதிர்வேல் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கர்பிணிப் பெண்களுக்களுக்கு உணவு முறைகளால் உடல்நலம் மற்றும் சிசுவினை பராமரிக்கும் முறைகள், நோயின்றி நீண்டநாள் வாழ ஊட்டச்சத்தான உணவு வகைகள், சரிவிகித உணவு முறை பின்பற்றுதலின் அவசியம் போன்றவைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. மேலும் காய்கறிகள், கீரை வகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு அவற்றின் நன்மைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊட்டசத்துமிக்க உணவுகளை சமைத்து அவைகளை கர்பிணிப் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர்கள் கர்பிணிப் பெண்களுக்கள், சுகாதார பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments