Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் வீதி வீதியாக நடந்தே சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

உத்திரமேரூர்
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிறுவேடல் ஜி.செல்வம் காஞ்சிபுரம்
மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக நேற்று உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட
ஆதவப்பாக்கத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ
தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் ஜி.செல்வம் நன்றி
தெரிவிப்பைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து காவாம்பயிர்,
கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, அழிசூர், களியாம்பூண்டி, பெருநகர், விசூர்,
மானாம்பதி, கண்டிகை, அரசாணிமங்கலம், பென்னலூர், அத்தியூர்,
காவனூர்புதுச்சேரி, கம்மாளம்பூண்டி, நாஞ்சிபுரம், கடல்மங்கலம்,
திருப்புலிவனம் உட்பட 40 திற்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாக
நடந்தே சென்று பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது பொது
மக்கள் ஆரத்தி எடுத்தும் பட்டாசுகள் வெடித்தும் சிறப்பான வரவேற்பு
அளித்தனர். நிகழ்வின் போது பொது மக்கள் அடிப்படை பிரச்சனைகள்
கண்டறியப்பட்டு அதற்கான உடனடி தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்
என்று உறுதியளித்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர செயலாளர்கள்
ஞானசேகரன், பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்,
விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, இயக்கிய அணி
கோபாலகிருஷ்ணன், பொறியாளரணி சசிகுமார், பெருநகர் வடிவேலு,
தயாளன், மானாம்பதி சுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments