திருப்புலிவனம் திரிசூலக்காளியம்மன் பள்ளி 14 ஆம் ஆண்டு விழா
காஞ்சிபுரம் மாவட்டம்
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் ஸ்ரீ திரிசூலக்காளியம்மன் பள்ளி 14
ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்தது. அன்னை பரமேஸ்வரி அம்மையார்
தலைமை தாங்கினார், பள்ளி தலைமையாசிரியர்கள் க.தனமுத்து, தி.வனிதா, முன்னிலை வகித்தனர்,
நிர்வாகி ஜீ.காளிதாஸ் அனைவரையும் வரவேற்றார், கே.ஜீவிதா ஆண்டறிக்கை வாசித்தார், அரிமா
சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ஹரிதாஸ், அரிமா சங்க மாவட்ட தலைவர் ஜீவா, அரசு வழக்கறிஞர்
மணி, பள்ளி கௌரவ தலைவர் ராதாகிருஷ்ணன், உத்தரமேரூர் அரிமா சங்க தலைவர் கோபி, ஆசிரியர்
லோ.வரகுணபாண்டியன், ஆகியோர் பள்ளி சிறுவர் சிறுமியருக்கு சான்றிதழ், நினைவு பரிசுகள்
வழங்கி பராட்டி பேசினார்கள், ஆசிரியை ஹேமலதா நன்றி கூறினார்.
No comments