Disqus Shortname

உத்திரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்

உத்திரமேரூர் மார்ச், 14
உத்திரமேரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய மாநில
அரசுகளை கண்டித்து போராட்டம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மோகனன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்  பெருமாள், வட்ட தலைவர் ஆறுமுகம், கெம்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத்தினை உயர்த்தி  வழங்கிட வேண்டும், விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும், வறட்சியை பயன்படுத்தி ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை தூர்வாறிட வேண்டும், செய்யாற்றிலும், பாலாற்றிலும் தடுப்பணைக்கட்டிட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு உத்திரமேரூர்
செங்கல்பட்டு சாலையில் உத்திரமேரூர் பஜார் வீதியில் சாலை மறியலில்
ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை உத்திரமேரூர் பேலீசார் கைது செய்தனர்  பின்னர் மாலை விடுவித்தனர்.

No comments