Disqus Shortname

ரேஷன் பொருள்கள் வழங்காததை கண்டித்து திமுக ஆர்பாட்டம்

உத்திரமேரூர் ,மார்ச், 13
உத்திரமேரூர் கூட்டுறவு பண்டக சாலை முன்பு ரேஷன் கடையில் முறையாக
பொருட்கள் வழங்காததை கண்டித்து உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர் உட்பட
திமுகவினர் ஆபாட்டம் செய்தவர்கள் கைது.உத்திரமேரூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கடந்த மூன்று மாதங்களாக முறையாக வழங்கப்படவில்லை என பொது மக்களின் புகாரையடுத்து கடந்த 6 ஆம் தேதி உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர் உத்திரமேருர் பகுதியிலுள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் பொருட்களின் இருப்பு விவரங்களுக்கான பதிவேடுகளை  பார்வையிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு முறையாக அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்டவைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் பொருட்கள் வாங்க வந்த பயணாளிகளிடம்
குறைகளை கேட்டறிந்தார்.  இவைகளை கண்டித்து நேற்று உத்திரமேரூர் கூட்டுறவு  பண்டக சாலை முன்பு திமுக சார்பில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
ஆர்பாட்டத்தில் உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை
தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகன்,  மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை, மாவட்ட இலக்கிய அணி  துணை அமைப்பாளர்கள்டி.கே.கோபாலகிருஷ்ணன், காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் ரேஷன் கடைகளில் முறையாக பொருடகள் வழங்காத அதிகாரிகளை கண்டித்தும், அதிமுக அரசின் மக்கள்
விரோதப்போக்கை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பட்டத்தில்
ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்
க.சுந்தர் எம்.எல்.ஏ உட்பட திமுக நிர்வாகிகளை உத்திரமேரூர் போலீசார் கைது
செய்து தனியார் திருமண மண்படத்தில் வைத்தனர். இப்போராட்டத்தின் போது தொ.மு.ச நிர்வாகி து.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ், கரிகாலன் உட்பட நிர்வாகிகள் பொது மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


No comments