Disqus Shortname

உத்திரமேரூரில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் வடமாநில வாலிபர் கைது

உத்திரமேரூர் 14/09/2020
உத்திரமேரூர் பேரூராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சேரி தெருவில் மளிகை கடை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபாராம் 24 என்பவர் ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பதுக்கி வைத்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உத்திரமேரூர் போலீசார் தீபாராமை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

No comments