உத்திரமேரூரில் காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கியில் சிறுகுறு வியாபாரிகளுக்கு ரூ.11 லட்சம் கடனுதவி
உத்திரமேரூர் 14/09/2020
உத்திரமேரூரில் செயல்பட்டு வரும் காஞ்சி மத்தியக் கூட்டுறவு வங்கியில்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 09 சிறு குறு வியாபாரிகளுக்கு ரூ. 11
லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் காஞ்சி
மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டு 9 வியாபாரிகளுக்கும் ரூ.11 லட்சத்திற்கான கடனுதவிகளை வழங்கினார். மேலும் கொரோனா காலத்தில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி முக கவசங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கி மேளாளர் விமல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments