Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மனைவி வீட்டிற்கு வராததால் கணவர் தீகுளித்து தற்கொலை

உத்திரமேரூர் 07/09/2020
உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் இவரது மகள் வளர்மதி 33, கடந்த 2009 ஆம் ஆண்டு வளர்மதிக்கும் சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜா 36 என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு தீபக் 10, சதீஷ் 08 என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜாவிற்கும் மனைவி வளர்மதிக்கும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டதாக
கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த வளர்மதி கோவித்துக் கொண்டு தனது
பிள்ளைகளுடன் தோட்டநாவல் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில்
தஞ்சமடைந்தார். பின்னர் ராஜா தனது மனைவியை தேடி மாமனார் வீட்டிற்கு வந்து மனைவியை சமாதானம் செய்து அவரை அழைத்து செல்ல
முற்பட்டுள்ளார். அதற்கு மனைவி மறுத்துவிட்டதால் மனமுடைந்த ராஜா
அடுப்படியில் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தனக்கு தானே தன் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா உயிரிழந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments