Disqus Shortname

உத்திரமேரூரில் ஸ்ரீவேணுகோபால் சுவாமி ஆலய கிருஷ்ண ஜெயந்தி விழா

உத்திரமேரூர் 24/08/2019
உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள ஸ்ரீவேணுகோபால் சுவாமி ஆலயத்தில்
நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடந்தது. கிருஷ்ணஜெயந்தி
விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்
சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இரவு அலங்கரிக்கப்பட்ட உற்ச்சவ ஸ்ரீவேணுகோபால் சுவாமி பல்லக்கில்
மேளதாளங்களுடன், வானவேடிக்கைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக
ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வேணுகோபால்
சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தும், தேங்காய் உடைத்தும் சுவாமியை
வழிபட்டனர். இந்நிகழ்வின் போது குழந்தைகள் கண்ணன், இராமர், சீதா,
ராதை, ஹனுமன் போன்ற வேடமிட்டு ஊர்வலம் வந்தனர். சுவாமி
கோவிலை வந்தடைந்தவுடன் கோவில் வளாகத்தில் உரியடி நிகழ்ச்சி வெகு
விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் உரியடி
நிகழ்வில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் உரி அடித்தனர். விழாவை
முன்னிட்டு கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. விழாவில்
கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments