சாலவாக்கம் அரசு பள்ளியில் லேப்டாப் வழங்கும் விழா 292 மாணவ- மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா
லேப்டாப் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் பள்ளி தலைமையாசிரியர் ஜெயரூபி
தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் துரைவேலு,
ஊராட்சி செயலாளர் சக்திவேல், நிர்வாகிகள் வெங்கடேசன், பாபு, முரளிதரன்,
விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பக்தவச்சலம் அனைவரையும் வரவேற்றனர் நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கி வாழ்த்திப் பேசினர் விழாவில் பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் பயிலும் 292 மாணவ மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ - மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments