Disqus Shortname

அதிமுகவினர் தமிழக முதல்வர் அம்மாவின் மறைவிற்கு மொட்டையடித்து அஞ்சலி

காஞ்சிபுரம் டிச, 09

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், சாலவாக்கம், காஞ்சிபுரம், சுங்குவாச்சத்திரம், ஸ்ரீபெருமந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதியன்று மாரடைப்பால் காலமானார். இச்சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஆழ்த்தியது. இந்த மறைவிற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தும் விதமாக அதிமுக நிர்வாகிகள் மொட்டையடித்து முடியினை காணிக்கையாக்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெருமந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் பழனி, கழக அமைப்பு செயலாளர் மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், வேலியூர் தனசேகரன், வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, நகர செயலாளர் ஸ்டாலின், காஞ்சி மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், வழக்கறிஞர் வள்ளிநாயகம், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் சசிகுமார், துரைபாபு, விஷ்ணு, முன்னாள் துணை சேர்மென் ரவிசங்கர், புலியூர் பழனி, லூசியாஜேம்ஸ், கே.சி.எம்.விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் மொட்டையடித்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர்.

No comments