Disqus Shortname

கொடுத்த கடனை கேட்டு தீக்குளித்த பெண் சாவு


உத்திரமேரூர் டிச, 23
உத்திரமேரூர் பேரூராட்சி வடக்கு ரெட்டித் தெருவைச் சேர்ந்தவர் பிரேமா
(45) இவர் தனது கணவரிடம் இருந்து பிரிந்து தாயார் ஏகாத்தம்மாளுடன்
வசித்து வருகிறார். உத்திரமேரூர் பேரூராட்சி கருணீகர் தெருவில் வசிப்பவர்
உண்ணாமலை (41) இவரது கணவர் கோவிந்தன் (49). இவர்கள் சுமார் 10
வருடங்களுக்கு முன் வீடு கட்டப்போவதாக கூறி பிரேமாவிடம் ரூ. 5 லட்சம்
வாங்கியுள்ளனர். வாங்கிய பணத்தை வைத்து வீடுகட்டி முடித்தனர். வீடுகட்டி
முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் பிரேமாவிடம் வாங்கிய தொகையை திரும்பத்  தரவில்லை. கடன் தொகையினை பெருவதற்காக பிரேமா தினமும் உண்ணாமலை வீட்டிற்கு  காலை மாலை என இரு வேலையும் அலைந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில்  வழக்கம் போல் பணம் கேட்க பிரேமா கையில் ஒரு பையுடன் உண்ணாமலை வீட்டிற்கு
சென்றுள்ளார். வீட்டில் தனிமையில் இருந்த உண்ணாமலையிடம் பணம்
கோட்டுள்ளார். இருவருக்கும் இது சம்மந்தமாக வாக்குவாதம்ஏற்ப்பட்டுள்ளது.
அப்போது உண்ணாமலை பணத்தினை கொடுக்க மருத்தாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரேமா கண்ணிமைக்கும் நேரத்தில் கையிலிருந்த பையில் உள்ள கேன் ஒன்றில் வைத்திருந்த மண்ணெண்யை தனது உடலில் ஊற்றி கொண்டு தீவைத்துக்  கொண்டார். உடனே அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் பிரேமா  உடலிலுள்ள தீயினை அணைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனிநின்றி பிரேமா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

No comments