Disqus Shortname

தாசில்தார் அலுவலக வளாகத்தில் டூ - வீலருக்கு இடமின்றி தவிப்பு

 உத்திரமேரூர்:


உத்திரமேரூர்- - மானாம்பதி சாலையில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் எதிரே வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட கிராமத்தினர், பல்வேறு தேவைகள் காரணமாக இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.ஜாதி சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று, வாரிசு சான்று மற்றும் நில உடமை சான்றிதழ்கள் பெற, தினசரி நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். இந்த அலுவலகத்திற்கு வருபவர்கள், தங்கள் இருசக்கர வாகனங்களை, அலுவலக வளாகத்திற்குள் நிறுத்த இடவசதி இல்லாமல் அவதிபடுகின்றனர்இதனால், அலுவலக வளாகத்தின் வெளியே சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எனவே, உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம்பின்புறம் காலியாக உள்ள வருவாய்த் துறை இடத்தை, வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்பாட்டிற்கு கொண்டு வர, பல தரப்பினரும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments