Disqus Shortname

உத்திரமேரூர் அருகே தூக்கிட்ட நிலையில் வாலிபர் சடலம் மீப்பு உத்திரமேரூர் போலீசார் தீவிர விசாரணை

உத்திரமேரூர் 14/06/20223
உத்திரமேரூர் அருகே திருப்புலிவனம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு 33 இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஷர்மிளா என்ற மனைவியும் 1 மகன் 1 மகள் உள்ளனர். மது பழக்கம் கொண்ட பிரபு வீட்டில் குடும்ப பிரச்சைனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று குடி போதையில் இருந்த பிரபு காலை சென்றவர் மாலை வரை வீட்டிற்கு வாரமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாய நிலத்தில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கி நிலையில் பிரபு சடலமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரபு குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments