Disqus Shortname

உத்திரமேரூர் அருகே புதிய ரேஷன் கடை திறப்பு விழா எம்.எல்.ஏ எம்.பி பங்கேற்பு

உத்திரமேரூர் 

உத்திரமேரூர் அடுத்த காவாம்பயிர் கிராமத்தில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 11.25 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவாசங்கர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சி எம்.பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். மேலும் பொது மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கி இனிப்புகள் வழங்கினர். இதனைத் தொடர்ந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரம் ஏழை எளிய மக்கள் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments