உத்திரமேரூர் அருகே பள்ளி மாற்றுதிறனாளி சிறுமி பள்ளிக்கு செல்ல மறுத்து தற்கொலை முயற்சி
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த திணையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி
இவரது மகள் சுபிக்ஷா 13 மாற்றுதிறனாளியான இவர் தந்தையை இழந்த
நிலையில் களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர்
சிறுவர்கள் காப்பகத்தில் தங்கி அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு முடித்து
விட்டு 8 ஆம் வகுப்பு செல்ல உள்ளார். இந்நிலையில் பள்ளி விடுமுறைக்கு
பின் நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறக்கப்பட்டதும்.
பள்ளி செல்லாத சுபிக்ஷா நேற்று முன்தினம் இரவு காப்பகத்திற்கு சென்று
பள்ளிக்கு செல்லுமாறு தாய் தனலட்சுமி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்த சுபிக்ஷா நேற்று அதிகாலை வீட்டில் இருந்த
மண்ணெண்னையை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே சென்று
மண்ணெண்னையை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுபிக்ஷாவை
மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஙகு
தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுபிக்ஷா சிகிச்சைப் பெற்று
வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து பெருநகர் போலீசார் வழக்கு பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments