உத்திரமேரூர் அருகே விசூர் கிராமத்தில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு கூட்டம்
நேற்று நடைபெற்றது மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் ஸ்ரீராம் தலைமை
தாங்கினார். மாவட்டபுகையிலை சமூக பணியாளர் சரிகா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்
உமாதேவி, ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்
சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன்
அனைவரையும் வரவேற்றனர். நிகழ்ச்சியில் புகையிலை உபயோகத்தினால் ஏற்படும் தீமைகளும்
புகையிலை பழக்கம் உள்ளவர்கள் உடன் பழகுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் குறித்து
எடுத்துரைக்கப்பட்டது இதனை தொடர்ந்து பொதுமக்கள் முன்னிலையில் புகையிலை எதிர்ப்பு
குறித்த உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் உட்பட
உள்ளாட்சி பிரதிநிதிகள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments