Disqus Shortname

உத்திரமேரூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த அலத்தரை கிராமத்தை சேர்ந்தவர் ரேகா 30
திருமணமானவர். இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில்
பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது கம்பெனியில்
பொங்கல் விழா கொண்டாடுவதற்கு செல்வதற்கு புறப்பட்டார் அப்போது
கம்பெனி வாகனம் சென்று விட்டதால் தனது கணவரின் தம்பி சிவசக்தியை
28 அழைத்து கொண்டு உத்திரமேரூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில்
சென்று கொண்டிருந்தார். அப்போது பென்னலூர் அருகே வந்த போது
எதிர்பாராத விதமாக சாலை அருகே உள்ள பள்ளத்தில் தவறி விழுந்ததில்
சிவசக்தி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
ரேகா கிழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இதைக்கண்ட கிராம மக்கள்
ரேகாவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு
அனுபபி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல்
அறிந்த பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிவசக்தியின்
உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத
பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து பெருநகர் போலீசார்
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments