Disqus Shortname

மருத்துவான்பாடி கிராமத்தில் ஏழை, எளிய பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் மரகன்று வழங்கும் விழா

உத்திரமேரூர்
உத்திரமேரூர் ஒன்றிய தேமுதிக சார்பில் மருத்துவான்பாடி கிராமத்தில்எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்து. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தேமுதிக ஒன்றிய செயலாளர் அழிசூர் வி.கன்னியப்பன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் கார்த்திக், பொருளாளர் சந்திரசேகரன், இளைஞரணி அருண்குமார், வடிவேலு அகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் மோகன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மருத்துவான்பாடி மற்றும் நாகமேடு கிராமங்களில் தேமுதிக கட்சி கொடியினை ஏற்றி பொது மக்களுக்கு
இனிப்புகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மாணவ-
மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி
உபகரணங்கள் மற்றும் மரகன்றுகள் வழங்கி வாழ்த்தினார். இதனைத்
தொடர்ந்து ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்
மகளிரணி பவளக்கொடிதங்கராஜ், முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.

No comments