மீனாட்சி அம்மாள் குளோபல் பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி
உத்திரமேரூர்
அக், 26
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்
மீனாட்சி குளோபல் செகண்டரி பள்ளியில் அறிவியல் மற்றும் கணித கண்காட்சி நேற்று
பள்ளி வளாகத்தில் நடைபெற்றது பள்ளி முதல்வர் சாந்திபாலாஜி தலைமை தாங்கினார் நிர்வாக
அலுவலர் வாசுதேவன், சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் என்.கவிராஜன்
நிகழ்ச்சியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். மாணவர்கள் தங்களது படைப்புகளை உருவப்படுத்தி
கண்காட்சியில் வைத்து அவர்களே விளக்கமளித்தனர். மாணவர்களின் சிறந்த படைப்புகளுக்கு
சிறப்புவிருத்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் பொறியாளர்
மேகவண்ணன், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ – மாணவியர் உட்பட பலர் கலந்து
கொண்டனர். முடிவில் ஆசிரியை இராஜலட்சுமி நன்றி கூறினார்.
No comments