Disqus Shortname

உத்திரமேரூா் அருகே மாட்டின் கயிறு கழுத்தில் மாட்டி இளம்பெண் மரணம்

உத்திரமேரூா் அக் 11

உத்திரமேரூரை அடுத்த அத்தியூா் கிராமத்தை சோ்ந்தவர் விஜயா வயது 26  கணவா்
பெயா் லோகநாதன்.இவர் விவசாய தொழில் மற்றும் மாடுவளா்ப்பும்  செய்து
வருகிறார். தினமும் மாடுகளை காலையில் மேய்சலுக்கு கொண்டு சென்று விட்டு
மாலையில் வீடு திரும்புவது வழக்கம் இதேபோல் நேற்று மாடுகளை
மேய்ச்சலுக்காக கொண்டுசென்றுவிட்டு மாலைவேளையில் வீட்டிற்கு வரும்
வழியில் மாடுகள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டு வேகமாக ஓடியது 
இதில்
நிலைதடுமாறிய விஜயா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்  உடனே விஜயாவின்
தோளில் இருந்த மாட்டின் கயிறு விஜயாவின் கழுத்தை இறுக்கியதால்
மூச்சுதிணறியது இவரின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்திருந்தவா்கள் ஓடி
வந்து விஜயாவை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்
அங்கு சிகிச்சை பலனின்றி விஜயா மரணம் அடைந்தார் இச்சம்பவம் குறித்து
உத்திரமேரூா் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்

No comments