Disqus Shortname

சாலவாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த கோரி துண்டுப்பிரசுரம் வழங்கி ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் செப், 28

உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல் படுத்த கோரி
துண்டுப்பிரசுரம் வழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மக்கள் செய்தி
தொடர்பாளர் தி.வ.எழிலரசு தலைமை தாங்கினார். காஞ்சி மாவட்ட செயலாளர்சூ.க.விடுதலைச்செழியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசேமதுகடைகளை திறந்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்காதே, கூலித்தொழிலாளிகள் மதுவினை அடிமையாகி விடுவதை கைவிட மதுக்கடைகளை மூடு,மதுக்கடைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விடு உட்பட தமிழக அரசுக்குஎதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பபட்டன. போராட்டம் முடிந்தபின் சாலவாக்கம் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பொது மக்கள்மற்றும் வியாபாரிகளுக்கு மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்த துண்டுபிரசுரத்தை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சாலவாக்கம் விடுதலை
சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் திணேஷ், மதன், ஜெயபுரி, தன்ராஜ் உட்பட
பலர் பங்கேற்றனர்.

No comments