Disqus Shortname

அப்துல் கலாம் மறைவு உத்திரமேரூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு, மௌனஅஞ்சலி ஊர்வலம்

உத்திரமேரூர் ஜீலை 30
உத்திரமேரூரில் நேற்று அனைத்து வியாபாரிகள் சங்கம், உத்திரமேரூர் சோழா
அரிமா சங்கம், ரோட்டரி சங்கம்,   இணைந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்
மறைவுக்கு கடையடைப்பு செய்து அம்பேத்கர் சிலையிலிருந்து பஜார் வீதி
வழியாக ஊர்வலமாக வந்து பேருந்து நிலையத்தில் அப்துல்கலாம் படத்திற்கு
மெழுதுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர். அனைத்து வியாபாரிகள் சங்கத்
தலைவர் டி.ரமேஷ், சோழா அரிமா சங்க தலைவர் ரமேஷ்சௌத்ரி, ரோட்டரி சங்கம்
தலைவர் செல்வகுமார் ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையத்தில் இரங்கல்
கூட்டம் நடைப்பெற்றது. இதேப்போல் தேமுதிக சார்பில் ஒன்றிய செயலாளர்
கன்னியப்பபன் தலைமையில் மாவட்ட துணைத் தலைவர் வி.பி.ஜான் முன்னிலையில்
கழக நிர்வாகிகள் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
வேன், கார் ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் தலைவர்  செல்வம் தலைமையில்
ஓட்டுனர்கள் பஜார் வீதி வழியாக ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

No comments