உத்திரமேரூர் அருகே திமுக சார்பில் பொங்கல் பரிசு வழங்கும் விழா
உத்திரமேரூர்
உத்திரமேரூர் அடுத்த அ.பி.சத்திரம் கிராமத்தில் திமுக சார்பில் பொங்கல்
பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி முருகன்
தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பாரிவள்ளல்,விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, இலக்கிய அணி துணைஅமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், பெறியாளர் அணி சசிகுமார் ஆகியோர்முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்க.சுந்தர். எம்.எல்.ஏ கலந்து கொண்டு 150 ஏழை. எளிய மக்களுக்கு பொங்கல்பரிசாக வேட்டி, சேலை, அரிசி, கரும்பு உள்ளிட்டவைகள் அடங்கிய பெட்டகம்வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments