Disqus Shortname

காவனூர் புதுச்சேரி கிராமத்தில் அரிசி ஆலையில் 9 கொத்தடிமைகள் மீட்பு

உத்திரமேரூர், 2019 ஜன. 23: 
உத்திரமேரூர் அடுத்த காவனூர் புதுச்சேரி கிராமத்தில் செயல்படும் தனியார் அரிசி ஆலையில், கொத்தடிமைகள் வேலை செய்வதாக, உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவிக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் விரைந்து பார்த்தபோது, 2 குடும்பத்தினர் வேலை பார்த்தது தெரியவந்தது. விசாரணையில் வாசு (34), அவரது மனைவி அமுலு (30), மகள் பார்வதி (12), மகன் அர்ஜுனன் (6) மற்றும் இன்னொரு குடும்பத்தை சேர்ந்த விஜி (20), அவரது மனைவி மலர் (25) மகன் கார்த்திக் (8), மாசி (3), மகள் ராதிகா (6) என்பது தெரிய வந்தது.இவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 3 ஆண்டுகளாக இங்கு வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. எனவே போலீசார் அவர்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.

No comments