Disqus Shortname

உத்திரமேரூரில் 156 விவேகானந்தர் பிறந்தநாள் விழா

உத்திரமேரூர்
உத்திரமேரூரில் மல்லியங்கரணை ராமகிருஷ்ணா மடம் மற்றும் ஆர்.எஸ்.எஸ்சார்பில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விவேகானந்தர்பிறந்தநாளை தேசிய இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில்ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மாணவ-மாணவியர்கள் பஜார் வீதியில் ஊர்வலமாகசென்று பஸ் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த விவேகானந்தர் படத்துக்கு மாலைஅணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் மாணவ-மாணவியர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சி, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை
பற்றிய பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சியின் போது சிறந்தமுறையில் தற்காப்பு கலை பேச்சு மற்றும் கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா மடம் நிர்வாகி அமிர்தானந்தா, ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள்பிரசாத் ஸ்ரீதர், வார்த்தா ரமேஷ், கலைமணி, ராஜவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments