Disqus Shortname

உத்திரமேரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

உத்திரமேரூர் ஜீலை, 14

உத்திரமேரூரில் தனியார் கல்லூரி மாணவ- மாணவியர்களின் வாக்காளர்
விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரணியில் உத்திரமேரூர்
வட்டாட்சியர் ராஜம்மாள் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை துவக்கி
வைத்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் வரதராஜன், துணை வட்டாட்சியர்
லோகநாதன், தனியார் கல்லூரி முதல்வர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேர்தல் உதவியாளர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். பேரணியானது
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கி பெரிய நாராசம்பேட்டை தெரு,
கைலாசநாதர் கோவில் தெரு, பஜார் வீதி, 
சன்னதி தெரு உள்ளிட்ட முக்கிய
வீதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில்
வாக்களிப்பதின் அவசியம், பணத்திற்காக ஓட்டுகளை விற்க கூடாது, வாக்குரிமை
நமது நாட்டு உரிமை, வாக்களிப்பது நமது கடமை உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய
பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள்
வழங்கியும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவியர்கள், அரசு ஊழியர்கள் பொது மக்கள்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments