உத்திரமேரூர் செல்லும் கீழ்ரோடு சாலையை சீர்செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
பதிவு செய்த நேரம்:2012-09-14 11:56:35
காஞ்சிபுரம், : காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூக்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில் கீழ்ரோடு வழியாக உத்திரமேரூருக்கு ஓரிக்கை, களக்காட்டூர் வழியாக செல்லலாம்.
இந்த வழியாக சென்றால் மாகரல், வேடல், கீழ்பெரமனூர், ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. பெரும்பாலும் இந்த கிராமங்களுக்கு தடம் எண் 34 பேருந்து இயக்கப்படுகிறது. இந்த கிராமங்கள் உத்திரமேரூர் ஒன்றியத்தை சேர்ந்திருந்தாலும், மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், வேளாண்மை சம்பந்தமானவைகளுக்கு காஞ்சிபுரத்திற்கு வரவேண்டும்.
ஒருநாளைக்கு 5ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இந்த சாலை பயன்படுத்துகிறார்கள். ஓரிக்கை பகுதி யில் உள்ள தனியார் பள்ளி அருகில் சாலை போக்குவரத்துக்கு உதவாத வகையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் கவிழ்ந்துவிடும் நிலையில் உள்ளன. சில வாகனங்கள் சாய்ந்து விடுவதால் காயம் ஏற்படுகிறது. இதனால், இரவில் மோட் டார் சைக்கிளில் செல்பவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பலமுறை விழுந்து காயமடைந்துள்ளனர்.
தனியார் பள்ளி உள்ளதால் மாணவ, மாணவிகளும் சாலையை கடக்க மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே மாணவ, மாணவிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக போர்க்கால நட
வடிக்கை எடுத்து சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments