Disqus Shortname

சேந்தாங்குளம் கிராமத்தில் நடந்த வருவாய் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் க.சுந்தர் எம்.எல்.ஏ

உத்திரமேரூர் செப், 16
உத்திரமேரூர் அடுத்த சேந்தாங்குளம் கிராமத்தில் நேற்று வருவாய் திட்ட
முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உத்திரமேரூர் வட்டாட்சியர் அகிலாதேவி
தலைமை தாங்கினார். சாலவாக்கம்ம திமுக ஒன்றிய செயலாளர் டி.குமார்,
மகளிர் அணி நிர்வாகி ரத்தனமாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவரணி நிர்வாகி முரளி அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடும்ப
அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய வாக்காளர் அட்டை, பட்டா
மாற்றுதல், திருமண உதவி தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட
கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்கள் கிராம மக்களிடம் இருந்து
பெறப்பட்டது. அதில் 14 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 42
மனுக்கள் கணினி பதிவேற்றம் செய்யப்பட்டு பரிந்துரைக்கான
அனுப்பப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்
க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் சேந்தாங்குளம் கிராமத்தில் உள்ள
தொடக்கப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். அதைத் தொடர்ந்து
கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் கோரிக்கை
மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொது
மக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது சிறப்பு மருத்துவ
முகாம் நடந்தது

No comments